Tuesday, September 4, 2007

ஆறு தமிழர்களைக் காணவில்லை!

கடந்த 30ஆம் திகதி திருகோணமலை வெருகல் காட்டுப் பகுதியில் வேட்டைக்குச் சென்ற ஆறு தமிழர்கள் இன்னும் வீடு வந்து சேரவில்லையென உறவினர்கள் பொலிஸில் புகார் செய்துள்ளனர்.

இவர்களுடன் வேட்டைக்குச் சென்ற ஏழாவது நபர் இவர்களைக் காணவில்லையென சேருநுவர பொலிஸில் புகாரைப் பதிவு செய்துள்ளார். இவரை சமையல் வேலையைச் செய்யக் கூறிவிட்டு வேட்டையாடவும், மீன் பிடிக்கவும், தேன் எடுக்கவுமென சென்ற அறுவரும் காலையில் இருந்து மாலை வரை உரிய இடம் திரும்பாத நிலையில் மற்றையோரைத் தேடி காட்டினுள் சென்ற போது இராணுவ சீருடையில் வந்த மூவர் இவரைத் துரத்தியதாகவும் அவர்களிடமிருந்து தப்பி இந் நபர் பொலிஸ் நிலையத்துக்கு வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

No comments: