Sunday, September 9, 2007

ஏட்டிக்குப் போட்டியான சுவரொட்டிகள்

சென்னன் குழுவினரால் மட்டக்களப்பு பகுதில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எவ்(நாபா) மற்றும் ரியுஎல்எவ்(சங்கரி)போன்ற அமைப்பைச் சேர்ந்தோர் இப்பகுதியில் செயற்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்னும் தொனியில் இருந்தது.

இச் சுவரொட்டியை கருணா அணியினர் ஒட்டியதாக பரவலாக பேசப்பட்ட போதிலும் அவ் அமைப்பினர் அதனை மறுத்திருந்தனர்.

சென்னன் குழுவின் சுவரொட்டிக்கு பதிலளிக்கும் முகமாக இன்று ஈபிஆர்எல்எவ், புளொட், ரியுஎல்எவ் மற்றும் ஈபிடிபி போன்ற அமைப்புக்கள் இணைந்து கண்டனத்தை தெரிவித்து சுவரொட்டியும் துண்டுப்பிரசுரமும் வெளியிட்டுள்ளனர்.

சென்னன் குழுவினரின் சுவரொட்டிக்கு பதிலளிக்குமுகமாக ஈபிஆர்எல்எவ், புளொட், ரியுஎல்எவ் மற்றும் ஈபிடிபி அமைப்பினர் வெளியிட்டுள்ள சுவரொட்டி, துண்டுப்பிரசுர வெளியீட்டில் தமக்கு எதுவித தொடர்பும் இல்லையெனவும் தங்களின் ஒப்புதலின்றி இப்பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சென்னன் குழுவின் சுவரொட்டிக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லையெனவும் ஈபிடிபி அமைப்பின் மட்டு-அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in