Showing posts with label ஆக்கிரமிப்பு. Show all posts
Showing posts with label ஆக்கிரமிப்பு. Show all posts

Wednesday, August 29, 2007

பெரியநீலாவணை எனும் தமிழ் கிராமத்தில் மருதமுனையெனும் பெயர்ப் பலகை!

பெரியநீலாவணை வீ.சீ. வீதியில் அமைந்துள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி காரியாலயத்தின் பெயர்ப் பலகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமும் பெரியநீலாவணை என பதிவு செய்யப்பட்டிருந்த பெயர்ப் பலகை அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக மருதமுனை எனும் அருகிலுள்ள முஸ்லிம் கிராமத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

பெரியநீலாவணை எனும் தமிழ் கிராமத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் முஸ்லிம் அரசியல் வாதிகள் எடுத்து வரும் நடவடிக்கையின் ஓர் அங்கமே இதுவுமாகும்.

இப்படியான பெயர் மாற்றச் சம்பவங்கள் பல அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.