Showing posts with label அம்பாறை. Show all posts
Showing posts with label அம்பாறை. Show all posts

Saturday, August 25, 2007

தெருவைத் தோண்டிய போது சிக்கிய வெடி குண்டுகள்

கல்முனை சின்னத்தம்பி வீதியினை செப்பனிடும் ஊழியர்கள் தெருவைத் தோண்டிய போது அங்குப்ப் இரு வெடி குண்டுகள் இருக்கக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, பின்னர் அதனை காரைதீவு விசேட அதிரடிப் படையினர் கல்முனை கடற்கரையில் செயலிழக்க வைத்துள்ளனர்.

பொறிவெடியில் சிக்கிய அதிரடிப் படையினர்

அம்பாறை மாவட்டத்திலுள்ள கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியில் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை மாலை ஸ்ரீலங்கா விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 36 வயதுடைய எம்.ஜ.பி.ரொசாந்த, 32 வயதுடைய விக்கிரமராச்சி ஆகிய இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்,

படுகாயமடைந்த இரு விசேட அதிரடிப் படையினரும் தற்போது அம்பாறை அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகின்றது.