Showing posts with label அரச படை. Show all posts
Showing posts with label அரச படை. Show all posts

Sunday, September 2, 2007

உயிராபத்தின்றி வெடித்த கிளைமோர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாமுனை கிராம வீதியில் நேற்று காலை 7.30 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா விசேட அதிரடிப் படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என்பதுடன் இப்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ஸ்ரீலங்கா படையினால் மீட்கப்பட்ட பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, August 25, 2007

பொறிவெடியில் சிக்கிய அதிரடிப் படையினர்

அம்பாறை மாவட்டத்திலுள்ள கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியில் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை மாலை ஸ்ரீலங்கா விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 36 வயதுடைய எம்.ஜ.பி.ரொசாந்த, 32 வயதுடைய விக்கிரமராச்சி ஆகிய இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்,

படுகாயமடைந்த இரு விசேட அதிரடிப் படையினரும் தற்போது அம்பாறை அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகின்றது.