Showing posts with label விடுதலைப் புலிகள். Show all posts
Showing posts with label விடுதலைப் புலிகள். Show all posts

Saturday, August 25, 2007

தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் அழிக்கப்பட்டு வருகின்றது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் பகுதியைக் கைப்பற்றிய ஸ்ரீலங்கா படையினர் அப்பகுதியில் உள்ள நினைவுத் தூபிகளைகளையும் மாவீரர் சமாதிகளையும் இடித்து தரை மட்டமாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பொறிவெடியில் சிக்கிய அதிரடிப் படையினர்

அம்பாறை மாவட்டத்திலுள்ள கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியில் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை மாலை ஸ்ரீலங்கா விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 36 வயதுடைய எம்.ஜ.பி.ரொசாந்த, 32 வயதுடைய விக்கிரமராச்சி ஆகிய இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்,

படுகாயமடைந்த இரு விசேட அதிரடிப் படையினரும் தற்போது அம்பாறை அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகின்றது.